Skip to product information
1 of 8

Bharath book stores

Kavirasan maharasan collection (tamil book)

Kavirasan maharasan collection (tamil book)

Regular price £19.50 GBP
Regular price £20.50 GBP Sale price £19.50 GBP
Sale Sold out
Taxes included.
1) பதினெண் நற்கணக்கு
இது மொழியுலகில் ஒரு தன்னிகரற்ற உலக சாதனை நூலாகும். 

க முதல் ன வரையிலான 18/18 என அனைத்து மெய்யெழுத்துகளுக்கும் தனித்தனியே இலக்கணத்தோடு அமைந்த செய்யுள்களைக் கொண்ட நீதிநூலாகும்.

ககர வரிசையில் புலவர் காளமேகமும்,,தகர வரிசையில் அருணகிரிநாதரும் என இதுவரையிலும் 2 எழுத்துகளில் மட்டுமே ஒரு வர்க்கச் செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், பிற 16 எழுத்துகளில் செய்யுள்கள் எழுதுவது கடினமானது என்பதனால், சங்க கால புலவர்களுக்கும் இது கற்பனைக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

ஆனால்,,இதனை எழுதி வெளியிட்டுள்ள மகராசனின் இந்த நூலானது, அவரது தனிப்பட்ட சாதனை அல்லாது,,ஒவ்வொரு தமிழனும் மார்தட்டி பெருமையாக சொல்லக்கூடிய சாதனையாகும்.

அனைத்து மெய்யெழுத்துகளுக்கும் ஒவ்வொரு செய்யுள்கள் என்று உலகின் எந்தவொரு மொழியிலும் இதுவரையிலும் புலவர்கள் எழுதியதில்லை. அது நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் நடந்தேறியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரக்கூடிய நிகழ்வாகும்.

2) கவிராசன் கவிமாலை 
யாப்புச் செய்யுள்கள்,,புதுக்கவிதைகள், ஹைக்கூக் கவிதை, வசன கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், வில்லுப் பாட்டு என்று அனைத்தும் கலந்த கவிதைகளின் தொகுப்பே 
கவிராசன் கவிமாலை

3) புதிர் நாற்பது

சங்க இலக்கிய நூல்களுக்கு நிகராக 40 புதிர்களைக் கொண்ட நூலிது. 

இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது போன்ற பதினெண்கீழ் கணக்கு நூல்களுக்கு நிகரானதொரு நூலாக இந்த புதிர்நாற்பது நூல் அமைந்துள்ளது.

4) கவிராசன் மகராசன்
ஐஞ்சிறுங்காப்பியங்களிலொன்றான நீலகேசியைப் போன்று, கவியுலகில் ஓர் நீலகேசியாக இந்நூல் விளங்கக்கூடியது.

சங்க காலத்தில் பிறந்த ஒரு புலவன், மூவேந்தர்களின் அரசவையில் பிறபுலவர்களை வென்று, மூவேந்தர்களின் பாராட்டுதலோடு, உலக கவியரங்கத்தில் பிறமொழிப் புலவர்களையும் வென்று, தமிழ்மொழியைக் கொண்டு உலக அரங்கில் வெற்றிக்கொடியேற்றிட வைத்திடுமோர் நூலிது.
View full details